புதன், 5 நவம்பர், 2014

இலையுதிர் காலம்

நானும் மற்றுமொரு
சருகென பிரிகிறேன்....
நதியின் சலசலப்பில்
தொலைந்து மேலெழும்புகிறேன்...
வண்ணம் மாறி
எண்ணம் மாறி
நான் வகுத்திடா
விதிகளை அனுசிரிக்கிறேன்...
அறிந்திராத திருப்பங்களில்
சற்றே தள்ளாடுகிறேன்....
அமிழ்ந்தும் எழுந்தும்
நீரின் திசையோடு
பயணிக்கிறேன் ....
கண்டிராக்   காட்சிகளினோடு
பயணம் மாத்திரமே
நிதர்சனம் என்றாகிறது
 எனக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக