ஞாயிறு, 9 ஜூலை, 2017

அடையாளங்கள்


ஆழ்ந்து லயித்தக் கனவுகள்...
என் மீது படர்ந்து
பரவிய வண்ணங்கள் ....
இருள் அப்பிய சாலைகளின்
நிசப்தத்தில் கசிந்து
எங்கிருந்தோ வரும் மெல்லிய பாடல் ...
என்று கவிதைகள்
எழுதித் திரிந்திருக்கிறேன் ...
பின்பு ஒரு நாள்
ஒரு நீண்ட நெடிய பொழுதில்  என்னைத்
தொலைத்துவிட்டேன்...
திருப்பி மீட்கையில்
திரிந்துவிட்டிருந்த என்னில்
மீண்டும் படர்கின்றன நிறங்கள்
புதிய பரிமாணங்களில்...
இதோ சன்னமாய்
இழைகின்றது வடிவில்லாவொரு இசை ..