புதன், 12 ஏப்ரல், 2017

எழுத மறந்த குறிப்புகள்

நெடுந்தூரம் வரை வந்துவிட்டேன்!
பயணம் கடிதில்லை!
பரிமாறக் கூடவில்லை!
நெகிழ்ந்து களித்து
சேகரித்து பூரித்த
என் கவிதைகள் வார்த்தைகளாக
மட்டுமே இறைந்து கிடக்கின்றன..
திரும்ப சேர்க்க வலிந்தும் களைத்து
விழைவு நீர்த்து தோற்கிறேன்...
காலம் மட்டுமே உண்மையாகிய
வெளிகளின் பரிமாணங்களில்
ஒலி வடிவமற்றதாகிவிடுகிறது...
எனினும் அவற்றின் அழுத்தம்
அளவீட்டிற்கு அப்பாற்படுகிறது.....
உற்று நோக்கின்
விரிந்து விழுங்கிவிடும் நீல வெளி!
இல்லை என்றே கடப்பது எளிதாகிவிடுகிறது!