ஞாயிறு, 8 ஜூன், 2014

அந்தியில் தெளித்த வண்ணங்கள்




 ஏன் புன்னகைக்கிறேன்
எனப் புலப்படாது திரிகிறேன்...
மையலும் இல்லை
மயக்கமும் இல்லை...
எழுதிவைத்த விதிகள்
எதிலும் அகப்படவில்லை...
அந்திக்குள் குழைந்துவிட்ட
பகலின் மிச்சத்தின்போது
என் மேல் பூசிய
வண்ணங்கள்
கொண்ட கோலம் காண
புலர்ச்சிக்காகக்
காத்திருக்கிறேன்...