புதன், 8 ஆகஸ்ட், 2012

unakkana en pathivugal

உனக்கான என் பதிவுகள்


அங்கொன்றும்  இங்கொன்றுமாய் 
நினைவுகள் ...
சிதறிக் கிடப்பவை சிதையும்  முன் 
கோர்த்து  விட முயல்கிறேன்..

எனினும் 
உன்னுடன் நூற்றிய 
கானல் நூல் அல்லவா 
கொணர்ந்துள்ளேன்..
நிலம் தொட்டும்  
விழுதுகள் வேரூன்றாது 
விலகிய கிளையாகினேன் நான்..
மரத்து(மாகி)  விட்டாய் நீ..