ஈரமாகிக் கிடக்கிறது என் உலகம்
உள்ளும் புறமும்..
நெகிழ்ந்து திரிகிறேன்..
கவிதையும் காதலுமாய் உலவுகிறேன்..
நீலமும் பச்சையும் தாண்டி
நீளமும் அகலமும் அல்லாத
ஒரு வெளி
எனக்குள் விரிந்துக்கிடக்கிறது..
வினாக்களும் விடைகளும்
கலைந்து சிதறி விழுந்திருகின்றன
என்னென்று புரிந்துணருவேன்..
கோப்புகளுக்குள் அடங்கிவிடா
இசைவுபிறழ்வு நான்
எனத் தெளிகிறேன்...
உள்ளும் புறமும்..
நெகிழ்ந்து திரிகிறேன்..
கவிதையும் காதலுமாய் உலவுகிறேன்..
நீலமும் பச்சையும் தாண்டி
நீளமும் அகலமும் அல்லாத
ஒரு வெளி
எனக்குள் விரிந்துக்கிடக்கிறது..
வினாக்களும் விடைகளும்
கலைந்து சிதறி விழுந்திருகின்றன
என்னென்று புரிந்துணருவேன்..
கோப்புகளுக்குள் அடங்கிவிடா
இசைவுபிறழ்வு நான்
எனத் தெளிகிறேன்...