புதன், 4 ஜூலை, 2012

vidiyum rapozhuthugal

                     விடியும் இராப்பொழுதுகள் 



இளகும் இரவுக்குள்
ஒளிந்து நாளைய
பகலில் புலர்கிறேன்...என்
புன்னகையில் ஒரு 
அங்குலமேனும் குறைவதாகவே
அறிகிறேன் ஒவ்வொரு வைகறையிலும்...
கனவுகளின் அடர்த்தி
குறைந்திருக்கவும் இல்லை
எனினும் அவற்றை  வாழ
முனைந்திருக்கவில்லை
நேற்று வரையிலும்...
பொருளறிந்த பொழுதில்  மலர்கிறோம்
நானும் வானமும்.. 

செவ்வாய், 3 ஜூலை, 2012

en karpanai oorthi


                            என் கற்பனை ஊர்தி 

அண்டை  வீட்டுக்காரனின்
கனவுகள் கலைந்ததில்
என்  உறக்கம் தொலையக்  கூடாததுதான்...
எனினும் அவரின்
அச்சாணிப்  பழுதுகள் சரிபார்க்கப் பட்டிருக்கவில்லை..
இசையாத என் வண்டியோட்டிக்கும்
சக பயணிகளுக்கும் தம்மோடு வாழவே
சமயக்  குறைவுள்ளதால் (மனிதமும்)-அகமடைந்தவுடன்
நான் பயணித்திராத ஊர்தி கொண்டு 
பின்னோடு வருகிறேன்
பிழைத்திருங்கள்  முகந்தேடும்
மொழிப் பங்காளர்களே !