திங்கள், 21 அக்டோபர், 2013

முரண்

தீக்குழி ஒன்றை
பேணி வைத்துள்ளேன்
என்னுள்..
எந்நேரமும் தீக்கங்குகள்
இங்கும் அங்கும் சிதறித்
தகிக்கின்றன... அதில்
நேசங்கள் சில
நேரங்களில்
கருகி விடுகின்றன...
எனினும் அதன்
பிழம்புகள்  என்
தன்மையின்
தண்மைக்கு இதம் பரப்புகின்றன...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக