புதன், 4 ஜூலை, 2012

vidiyum rapozhuthugal

                     விடியும் இராப்பொழுதுகள் 



இளகும் இரவுக்குள்
ஒளிந்து நாளைய
பகலில் புலர்கிறேன்...என்
புன்னகையில் ஒரு 
அங்குலமேனும் குறைவதாகவே
அறிகிறேன் ஒவ்வொரு வைகறையிலும்...
கனவுகளின் அடர்த்தி
குறைந்திருக்கவும் இல்லை
எனினும் அவற்றை  வாழ
முனைந்திருக்கவில்லை
நேற்று வரையிலும்...
பொருளறிந்த பொழுதில்  மலர்கிறோம்
நானும் வானமும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக